மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'மெர்சல்' படத்தின் அதிக வசூலான வெற்றி அடுத்து விஜய்யை வைத்து படத்தை இயக்க உள்ள ஏ.ஆர்.முருகதாஸுக்கு டென்ஷனை ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது. இந்தியத் திரையுலகத்தில் முக்கிய இயக்குனராக கருதப்படும் இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், அவர் கடைசியாக இயக்கிய ஹிந்திப் படமான 'அகிரா', தமிழ், தெலுங்குப் படமான 'ஸ்பைடர்' ஆகியவை தோல்வியைத் தழுவின. 'ஸ்படைர்' படம் வெளிவருவதற்கு முன்பே விஜய் நடிக்கும் படத்தை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்பந்தம் ஆனார்.
'ஸ்பைடர்' படம் வெளிவந்து தோல்வியடைந்ததும், 'மெர்சல்' படம் வெளிவந்து பெரிய வெற்றியடைந்ததும் முருகதாஸுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. 'ஸ்பைடர்' பட நஷ்டத்தைத் தரவேண்டும் என தெலுங்கில் வினியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதாகவும் டோலிவுட்டிலிருந்து செய்திகள் வருகின்றன. மகேஷ் பாபுவின் அடுத்த தெலுங்கு பட வெளியீட்டின் போது அது சிக்கலை ஏற்படுத்தலாம்.
ஆனால், முருகதாஸுக்கு அது வேறு ரூபத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அட்லீயை விட முருகதாஸ் சிறந்த இயக்குனர் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் அட்லீ இயக்கிய 'மெர்சல்' படம் பெரிய வெற்றியைப் பெற்று 200 கோடி ரூபாய் வசூலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது 'மெர்சல்' வெற்றியை விட முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்க உள்ள படத்தின் வெற்றி இன்னும் பெரிய அளவில் அமைய வேண்டும். அதற்காக முருகதாஸ் இன்னும் கடுமையாக உழைத்தாக வேண்டும்.