ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறையின் ஒரு பிரிவான டிடிஎஸ் வரி குழுவினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை குறித்து விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் சண்டக்கோழி 2 படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது தான் என் அலுவலகத்தில் வருமானவரித்துறையின் டிடிஎஸ் வரி சோதனை நடப்பதாக செய்தி கிடைத்தது. எனது அலுவவலகத்தில் யாரும் இல்லை. எல்லோரும் படப்பிடிப்பில் இருந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் எச்.ராஜா மெர்சல் படத்தை நெட்டில் பார்த்தாக சொன்னார். அது தவறு என்று சுட்டிக் காட்டினேன்.
யாரையும் எதிர்த்து பேசவில்லை. அதற்காக இந்த சோதனை நடந்திருப்பதாக கருதவில்லை. இதை வழக்கமான நடவடிக்கையாகத்தான் கருதுகிறேன். ஒரு வேளை உள்நோக்கத்துடன் நடந்திருந்தால் அதை நான் சந்திப்பேன். நான் நேர்மையான முறையில் தொழில் செய்கிறேன். நேர்மையான முறையில் வரி கட்டுகிறேன். அதனால் எந்த பிரச்னைகளையும் சமாளிக்க முடியும்.
இதை விட பெரிய பிரச்னை கந்து வட்டி கொடுமை தாங்காமல் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தான். அது எப்படி நடந்தது, யார் காரணம். அந்த குடும்பத்துக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து கவலைப்படுவோம் என்றார் விஷால்.