Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு செய்தது உறுதியானது

24 அக், 2017 - 09:51 IST
எழுத்தின் அளவு:
Confirmed-:-Vijay-do-a-Tax-Evasion

நடிகர் விஜய், 2015ல், வரி ஏய்ப்பு செய்தது உண்மை தான்; அதற்காக, அபராத வட்டியும் கட்டினார் என, வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

வசனத்திற்கு எதிர்ப்பு
விஜய் நடித்த, மெர்சல் படம், பல்வேறு தடைகளை தாண்டி, தீபாவளிக்கு வெளியானது. அதன், கிளைமாக்ஸ் காட்சியில், ஏழு சதவீதம், ஜி.எஸ்.டி., வசூலிக்கும் சிங்கப்பூர் அரசு, பொதுமக்களுக்கு, இலவச மருத்துவ வசதி அளித்துள்ளது. ஆனால், இந்தியாவில், 28 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலித்தாலும், இலவச மருத்துவம் இல்லை என, விஜய் வசனம் பேசி உள்ளார். அதற்கு, பா.ஜ., தலைவர்கள், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து, டுவிட்டர் வலைதளத்தில் கருத்து பதிவிட்ட, எச்.ராஜா, நடிகர் விஜய், வருமான வரி ஏய்ப்பு செய்தார் எனவும் குற்றஞ்சாட்டி இருந்தார். ஆனால், விஜய் முறையாக வருமான வரி செலுத்தி உள்ளார் என, அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.இந்நிலையில், 2015ல், நடிகர் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்தது உண்மை தான் என, வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

வரி ஏய்ப்பு

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள், நேற்று கூறியதாவது: நடிகர்கள், விஜய், சமந்தா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட, திரைத் துறையினரின் வீடுகளில், 2015 அக்டோபரில், வருமான வரி சோதனை நடந்தது. அதில், 25 கோடி ரூபாய்க்கும் மேல், வரி ஏய்ப்பு செய்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக, நடிகர் விஜய், புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற சம்பளத்தில், ஐந்து கோடி ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டவில்லை. இது, சோதனையில் உறுதியானது. அதை ஏற்ற விஜய், அதற்குரிய வருமான வரியை செலுத்தினார். வரி ஏய்ப்பு செய்த மற்றவர்களிடமும், வருமான வரி வசூலிக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விஜய்க்கு கடைசி வாய்ப்பு
வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரி ஏய்ப்பு செய்தோர், அதற்குரிய வரி செலுத்திய பின், வரி ஏய்ப்பு தொகை மற்றும் அதற்கான வட்டியும் சேர்த்து, காம்பவுண்டிங் டேக்ஸ் எனப்படும், கூடுதல் வரி செலுத்த வேண்டும். 2015ல், விஜய் வீட்டில் சோதனை நடந்த போது, உங்கள் மீது, ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு, நோட்டீஸ் அனுப்பினோம்.

பின், அவர், கூடுதல் வரி செலுத்துவதற்கான ஆவணத்தை, 2016 துவக்கத்தில் தாக்கல் செய்தார். அந்த வரியை செலுத்தியதால், அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், காம்பவுண்டிங் டேக்ஸ் செலுத்திய ஒரு நபர், மீண்டும் வரி ஏய்ப்பு செய்தால், அவர்களை சிறைக்கு அனுப்ப, வழி வகை உண்டு. விஜய்க்கு கடைசி வாய்ப்பு, இளம் வயதிலேயே முடிந்து விட்டது. இனி, அவர், ஒருமுறை மீறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதாவும், வருமான வரி வழக்கில், காம்பவுண்டிங் டேக்ஸ் செலுத்தி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in