ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் விஜய், 2015ல், வரி ஏய்ப்பு செய்தது உண்மை தான்; அதற்காக, அபராத வட்டியும் கட்டினார் என, வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
வசனத்திற்கு எதிர்ப்பு
விஜய் நடித்த, மெர்சல் படம், பல்வேறு தடைகளை தாண்டி, தீபாவளிக்கு வெளியானது. அதன், கிளைமாக்ஸ் காட்சியில், ஏழு சதவீதம், ஜி.எஸ்.டி., வசூலிக்கும் சிங்கப்பூர் அரசு, பொதுமக்களுக்கு, இலவச மருத்துவ வசதி அளித்துள்ளது. ஆனால், இந்தியாவில், 28 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலித்தாலும், இலவச மருத்துவம் இல்லை என, விஜய் வசனம் பேசி உள்ளார். அதற்கு, பா.ஜ., தலைவர்கள், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து, டுவிட்டர் வலைதளத்தில் கருத்து பதிவிட்ட, எச்.ராஜா, நடிகர் விஜய், வருமான வரி ஏய்ப்பு செய்தார் எனவும் குற்றஞ்சாட்டி இருந்தார். ஆனால், விஜய் முறையாக வருமான வரி செலுத்தி உள்ளார் என, அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.இந்நிலையில், 2015ல், நடிகர் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்தது உண்மை தான் என, வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
வரி ஏய்ப்பு
இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள், நேற்று கூறியதாவது: நடிகர்கள், விஜய், சமந்தா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட, திரைத் துறையினரின் வீடுகளில், 2015 அக்டோபரில், வருமான வரி சோதனை நடந்தது. அதில், 25 கோடி ரூபாய்க்கும் மேல், வரி ஏய்ப்பு செய்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக, நடிகர் விஜய், புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற சம்பளத்தில், ஐந்து கோடி ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டவில்லை. இது, சோதனையில் உறுதியானது. அதை ஏற்ற விஜய், அதற்குரிய வருமான வரியை செலுத்தினார். வரி ஏய்ப்பு செய்த மற்றவர்களிடமும், வருமான வரி வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விஜய்க்கு கடைசி வாய்ப்பு
வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரி ஏய்ப்பு செய்தோர், அதற்குரிய வரி செலுத்திய பின், வரி ஏய்ப்பு தொகை மற்றும் அதற்கான வட்டியும் சேர்த்து, காம்பவுண்டிங் டேக்ஸ் எனப்படும், கூடுதல் வரி செலுத்த வேண்டும். 2015ல், விஜய் வீட்டில் சோதனை நடந்த போது, உங்கள் மீது, ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு, நோட்டீஸ் அனுப்பினோம்.
பின், அவர், கூடுதல் வரி செலுத்துவதற்கான ஆவணத்தை, 2016 துவக்கத்தில் தாக்கல் செய்தார். அந்த வரியை செலுத்தியதால், அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், காம்பவுண்டிங் டேக்ஸ் செலுத்திய ஒரு நபர், மீண்டும் வரி ஏய்ப்பு செய்தால், அவர்களை சிறைக்கு அனுப்ப, வழி வகை உண்டு. விஜய்க்கு கடைசி வாய்ப்பு, இளம் வயதிலேயே முடிந்து விட்டது. இனி, அவர், ஒருமுறை மீறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதாவும், வருமான வரி வழக்கில், காம்பவுண்டிங் டேக்ஸ் செலுத்தி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -