ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் '2.0'. மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்தப் படம் ஒரு 'பிளாக் பஸ்டர்' படம் என்று ஆமீர்கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஹிந்தித் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவ்வாறு கூறியுள்ளார்.
“ரஜினி சார் என்னை தொலைபேசியில் அழைத்து படம் பற்றிக் கூறினார். இயக்குனர் ஷங்கரைச் சந்தித்த போது, இந்தப் படம் ஒரு சாதனை படைக்கப் போகும் ஒரு பிளாக் பஸ்டர் படம் என்று உணர்ந்து கொள்ள எனக்கு நீண்ட நேரம் ஆகவில்லை.
அந்தப் படத்தைப் பற்றி ஒவ்வொரு முறை யோசிக்கும் போதும் ஆச்சரியப்பட்டுப் போவேன். படத்தில் ரஜினி சாரைத் தவிர வேறு யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை. இந்தப் படம் ரஜினி சாருக்கான படம். படத்துடன் என்னால் எமோஷனல் ஆக இணைய முடியவில்லை. அதனால்தான் இந்த '2.0' பட வாய்ப்பை நான் ஏற்க மறுத்துவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.
ஆமீர் கான் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.