ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'மெர்சல்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி' பற்றிய வசனங்களுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும், இல்லை என்றால் வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்தார். இன்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்டவர்கள் அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
'மெர்சல்' திரைப்படம் விலங்குகள் நல வாரியம் தடையில்லாச் சான்று வழங்க தாமதம் ஆனதால், படத்திற்காக தணிக்கைச் சான்றிதழ் பட வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாகத்தான் வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக விஜய், முதல்வரைச் சென்று சந்தித்தால் தான் அதுவும் நடைபெற்றது என்று திரையுலகத்தில் தெரிவித்தனர்.
தற்போது, பாஜக தலைவர்கள் படத்தின் வசனங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதால், அந்த வசனங்களுக்கு அனுமதி கொடுத்த சென்சார் குழுவினருக்கு சிக்கல் வரலாம் என்றும் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். அந்தக் குறிப்பிட்ட இரண்டு காட்சிகளுக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் பலமாகக் கைதட்டுகிறார்கள் என்ற தகவலும் கடந்த இரண்டு நாட்களாக வெளிவருகிறது.
இந்த சூழ்நிலையில் அந்தக் காட்சிகளை நீக்குவார்களா, அல்லது படக் குழுவினருக்கு வேறு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்படுமா என்று திரையுலகத்தில் பரபரப்புடன் இருக்கிறார்கள்.