ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான காட்சிக்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் தடைகள் பல கடந்து தீபாவளியான நேற்று ரிலீஸாகி இருக்கும் படம் மெர்சல். இப்படத்தில் மருத்துவம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சுட்டி காட்டியிருக்கிறார் விஜய். அதோடு ஜிஎஸ்டி., டிஜிட்டல் இந்தியா போன்றவைகள் குறித்தும் படத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ. தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் நில வேம்பு குடிநீர் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை நீக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். விஜய் அரசியலுக்கு வருவதற்காக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.