ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குவை குணப்படுத்த நேரடி மருந்துகள் இல்லை. அதேநேரம் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறையும் ரத்த தட்டு அணுக்களின் எண்ணிக்கை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம், மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசே டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயத்தை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்து உள்ளது.
நிலவேம்பு கஷாயத்தால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்ற பொருளில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் ஒன்றை பதிவிட்டார். இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் கமல் மீது சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் 10 ஆண்டுகளாக நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வருவதாகவும், அதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும், நிலவேம்பு கஷாயத்தை பற்றி கமல் தவறான தகவல்களை பரப்பி வருகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த புகார் மனு சைபர் கிரைம் போலீஸ்க்கு மாற்றப்பட்டுள்ளது.