ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நிலவேம்பு குடிநீரை வினியோகம் செய்ய வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் தன் ரசிகர் மன்றத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குவை குணப்படுத்த நேரடி மருந்துகள் இல்லை. அதேநேரம் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறையும் ரத்த தட்டு அணுக்களின் எண்ணிக்கை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம், மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருத்துவமுறை தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளிகளுக்கு நல்ல பலனை அளித்துள்ளது. அதனால் தமிழக அரசே டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயத்தை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்து உள்ளது. அலோபதி மருந்துகளை கையாளும் டாக்டர்களும் இதை எதிர்க்கவில்லை. எனவே டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் மிகப்பெரிய ஆறுதலான நம்பிக்கை தரும் மருந்தாக உள்ளது.
இந்நிலையில் நிலவேம்பு கஷாயத்தால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்ற பொருளில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். இக்கஷாயத்தால் மலட்டுத் தன்மை ஏற்படும் என சமூக வலை தளத்தில் தகவல் வேகமாகப் பரவி வருவதால் கமல் இந்த கருத்தை வெளியிட்டு உள்ளார். அதில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டு கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்.
ஆராய்ச்சி அலோபதியார் தான் செய்ய வேண்டுமென்றில்லை. பாரம்பரிய காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்க விளைவுண்டு என்பது பாரம்பரியம் தான் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பால் நிலவேம்பு உட்கொண்டு குணம் பெற்றவர்களும், தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தாங்கள் அருந்திய நிலவேம்பு குடிநீரால், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என அச்சம் அடைந்துள்ளனர்.
மனித வாழ்வோடு விளையாடுவதா... என அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்; நடிகர் கமல் நடிப்பை மட்டும் கவனிக்குமாறும் அறிவுரை கூறியுள்ளனர்.