ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் படங்கள் ஒவ்வொரு முறை வெளிவரும் போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வருவது வழக்கமாகிவிட்டது. அக்டோபர் 18ம் தேதி தீபாவளிக்கு 'மெர்சல்' வெளிவரும் என்று எப்போதே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சுமார் 40 மணி நேரங்களே உள்ள நிலையில் படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய முடியாத நிலையில் தயாரிப்பு நிறுவனம் உள்ளதாகத் தெரிகிறது.
விலங்குகள் நல வாரியம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கிய பிறகுதான் திரைப்படத் தணிக்கைக் குழுவினர் படத்திற்கு சான்றிதழ் வழங்குவார்கள். அடுத்து கேளிக்கை வரி குறைப்பிற்கான அரசாணையும், புதிய டிக்கெட் கட்டணங்கள் குறித்த அரசாணையும் தியேட்டர்காரர்கள் வசம் கிடைத்த பிறகே அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு ஆரம்பமாக உள்ளது.
இந்த விஷயங்களை அனைத்தும் முடிய இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் எனத் தெரிகிறது. எப்படியும் இன்று இரவுதான் படத்திற்கான முன்பதிவை பெரும்பாலான தியேட்டர்கள் ஆரம்பிக்க உள்ளன. இதனால், விஜய் ரசிகர்கள் தவிப்பில் உள்ளனர். தீபாவளி அன்றே படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவலில் உள்ள பல ரசிகர்கள் தியேட்டர்கள் வாசலில் காத்துக் கிடக்கிறார்கள்.