ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நான் 18 வயதிலேயே கல்யாணத்திற்கு ரெடியாகி விட்டேன்; ஆனால் இன்றுவரை மாப்பிள்ளைதான் கிடைக்கவில்லை, என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார். திருமணம் பற்றி பத்மப்ரியா அளித்துள்ள பேட்டியில், நான் ஒருபோதும் காதலித்து திருமணம் செய்துகொள்ள மாட்டேன். ஆனால் நிச்சயம் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். 18 வயதிலேயே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன். ஆனால் இன்று வரை நல்ல மாப்பிள்ளை தான் கிடைக்கவில்லை.
முதன் முதலாக என்னை பெண் பார்க்க வந்தவர் எனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார். அடுத்து வந்தவர் தனது 2 குழந்தைகளுக்கும் தாயாக இருக்க வேண்டும் என்றார். அதனால் அவர்கள் இருவரையும் நிராகரித்துவிட்டேன். திருமணம் என்பது ஒரு அற்புதமான வரம், என்று கூறியிருக்கும் பத்மப்ரியா, திருமணம் செய்து அதை அனுபவிக்காவிட்டால் பெண்ணாய் பிறந்து என்ன பயன்? என்று கேள்வியும் எழுப்பியிருக்கிறார்.