கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நயன்தாரா தன் மானேஜர் ராஜேஷ் என்பவரது பெயரில் தயாரித்துள்ளதாக சொல்லப்படும் படம் - 'அறம்'. கத்தி படத்தின் கதை என்னுடையது என்று உரிமை கொண்டாடி ஏ.ஆர்.முருகதாசுக்கு நெருக்கடி கொடுத்த மீஞ்சூர் கோபிதான் இந்தப் படத்தின் இயக்குநர்.
கோபி நயினார் என பெயரை மாற்றிக் கொண்டு இப்படத்தை அவர் இயக்கியுள்ளார். 'அறம்' படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார். சுனுலட்சுமி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள அறம் படம் ஆயுதபூஜைக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் போதிய தியேட்டர்கள் கிடைக்காததினால் அறம் படம் ஆயுதபூஜைக்கு வெளியாகவில்லை.
அதன்பிறகு தீபாவளி ரிலீசாக 'அறம்' திரைக்கு வரவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். லேட்டஸ்ட் தகவல்... தீபாவளிக்கும் இப்படம் வெளியாகவில்லை. அறம் படத்தை நவம்பர் 3-ஆம் ரிலீஸ் செய்யவிருப்பதாக தற்போது அறிவித்திருக்கிறார்கள்.
கலைப்புலி தாணுவின் இந்திரஜித் உட்பட சுமார் ஆறு படங்கள் அதே தேதியில் வெளியாக உள்ளன. எனவே, அறம் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்படலாம்.