விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் 'மெர்சல்' படம் வரும் 18ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3300 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அட்லீ இதற்கு முன் இயக்கிய 'ராஜாராணி' படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'மௌனராகம்' படத்தின் தழுவல் என்றும், 'தெறி' படம் கே. சுபாஷ் இயக்கிய 'சத்ரியன்' படத்தின் தழுவல் என்றும் பலரும் விமர்சனம் செய்திருந்தார்கள். இதனிடையே, 'மெர்சல்' படம் கூட கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் தழுவல்தான் என்றும் ஒரு தகவல் பரவியது. ஆனால், அப்படிப்பட்ட வதந்திகளை அட்லீ மறுத்து வந்தார்.
இப்போது 'மெர்சல்' படத்தின் கதை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதை பிரிட்டிஷ் திரைப்பட சென்சார் குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். மேஜிக் நிபுணர் ஒருவரும், டாக்டர் ஒருவரும் சேர்ந்து இந்தியாவில் நடக்கும் மெடிக்கல் உலக குற்றங்களைப் பற்றி கண்டு பிடித்து வெளியிடுகிறார்கள். இவர்களின் அப்பாவை வில்லன் கொன்றுவிடுகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அப்பா, மேஜிக் நிபுணர், டாக்டர் என மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
படத்தில் வன்முறைக் காட்சிகளும், அச்சுறுத்தலான வசனங்களும் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்திற்கு '12 ஏ' சான்றிதழை பிரிட்டிஷ் திரைப்பட சென்சார் குழு வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.