விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால், தியேட்டர் உரிமையாளர்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது, அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சினிமா டிக்கெட் விற்க வேண்டும், தின்பண்டங்களை எம்ஆர்பி., விலைக்கு விற்க வேண்டும், அம்மா குடிநீர் தியேட்டரில் விற்க வேண்டும் என்று சில விதிமுறைகளை விதித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு அபிராமி ராமநாதன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
சென்னை தியேட்டர் உரிமையாளர்கள், அபிராமி ராமநாதன் தலைமையிலான ஆலேசானை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், பார்க்கிங் கட்டணம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. ஆகையால் அதுப்பற்றி நான் எதுவும் பேச முடியாது. தின்பண்டங்களின் விலையை எம்ஆர்பிக்கே விற்க நாங்கள் அறிவுறுத்துவோம். இடத்திற்கு தகுந்தபடி சில பொருட்களின் விலையில் மாற்றம் இருக்கும், அதை மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வகையில் விலை நிர்ணயிக்கப்படும்.
விஷால் தனிப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவர் எங்களை கட்டளையிட முடியாது. அவர்களுக்கு என்று ஒரு சங்கம் உள்ளது. எங்களுக்கு என்று ஒரு சங்கம் உள்ளது. தனிப்பட்டு அவர் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதுதொடர்பாக எங்களிடம் பேசி ஆலோசனை நடத்திருக்கலாம். அப்படி செய்யாதது வருத்தம் அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் இன்றி நாங்கள் இல்லை, நாங்கள் இல்லாமல் அவர்கள் இல்லை. சினிமாவில் நாங்கள் அண்ணன் - தம்பி போன்றவர்கள்.
கேளிக்கை வரி தொடர்பான அரசு ஆணை இன்னும் கைக்கு வரவில்லை, இன்று மாலையோ, திங்கள் அன்றோ கைக்கு கிடைத்து விடும். அதன்பின்னர், எவ்வளவு டிக்கெட் கட்டணம், கேன்ட்டீன் கட்டணம் எவ்வளவு என முறைப்படி அறிவிப்போம். இதுதொடர்பாக அனைத்து தியேட்டர் உரிமையாளர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்போம்.
இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.