காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
தமிழ்நாடு அரசு அறிவித்த கேளிக்கை வரியை எதிர்த்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என அறிவித்தது. அதனால், அக்டோபர் 6ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட சில படங்கள் தயாரிப்பாளர் சங்கத்தினரின் வேண்டுகோளை ஏற்று வெளியீடு தள்ளி வைக்கப்பட்டன. தீபாவளிக்கு வரும் படங்கள் எப்படியும் இரண்டு வாரமாவது ஓட வாய்ப்பிருக்கின்றன. அதனால், அக்டோபர் 6ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படங்கள் வேறு போட்டியின்றி வெளியாக தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
அதன்படி, நவம்பர் 3ம் தேதியன்று அக்டோபர் 6ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படங்களை மட்டுமே வெளியிட ஒத்துழைப்பு கொடுக்குமாறு மற்ற தயாரிப்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கெனவே, ஒரு மாதம் தள்ளி வெளியாகும் படங்கள் மற்ற படங்களின் போட்டியில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அக்டோபர் 6ம் தேதியன்று “விழித்திரு, மெர்லின், ஓவியாவை விட்டா யாரு, அழகின் பொம்மி, இங்கிலீஷ் படம், திட்டி வாசல், உறுதி கொள்” உள்ளிட்ட சில படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. இவற்றில் தயாரிப்பாளர் சங்க கில்டில் பதிவு செய்யப்பட்ட படங்களும் தள்ளி வைக்கப்பட்டன. அனைவருக்கும் வசதியாக நவம்பர் 3ம் தேதியை தயாரிப்பாளர் சங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.