ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் மீதான கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கு திரையுலகத்தைச் சார்ந்த சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இரண்டு வாரங்களாக படங்கள் எதுவும் வெளியாகமல் இருந்தன.
கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக சில தினங்களாக அரசுடன் தமிழ்த் திரையுலகச் சங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. அதில் 2 சதவீதம் கேளிக்கை வரியை குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இனி தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து 28 சதவீதம் ஜிஎஸ்டியும், 8 சதவீதம் கேளிக்கை வரியும் வசூலிக்கப்படும்.
அரசுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், அரசு விதித்த டிக்கெட் கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட தியேட்டர் உரிமையாளர்கள் விற்க கூடாது. தின்பண்டங்களின் விலையில் எம்ஆர்பியில் என்ன விலை போடப்பட்டுள்ளதோ அந்த விலைக்கே விற்க வேண்டும். மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கேளிக்கை வரியை 2 சதவீதம் குறைத்த தமிழக அரசுக்கு நன்றி என்றார்.
தற்போதைய நிலவரப்படி, சென்னையில் அதிகபட்சமாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இனி ரூ.190 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும், ஆன்லைன் என்றால் மேலும் ரூ.30 அதிகரிக்கும். மற்ற ஊர்கள் மற்றும் தியேட்டர்களுக்கு ஏற்ப இந்த கட்டணத்தில் மாற்றம் இருக்கும்.