வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
'கபாலி' படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' படத்தில் தன்னுடைய பகுதி படப்பிடிப்பை ரஜினிகாந்த் முடித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'காலா' படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த் கடந்த இரண்டு நாட்களாக '2.0' படத்தின் கடைசி பாடல் காட்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறாராம். இந்தப் படப்பிடிப்பு ஏ.ஆர்.ரகுமானுக்குச் சொந்தமான ஆந்திரா பார்டரில் உள்ள சத்யவேடு நகரில் அமைந்துள்ள ஸ்டுடியோவில் நடந்து வருகிறதாம்.
'காலா' படத்தின் படப்பிடிப்பு மே மாதக் கடைசியில் மும்பையில் ஆரம்பமானது. அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று பின்னர் சென்னையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கிலும் நடைபெற்றது. சுமார் நான்கரை மாதங்களில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதக் கடைசியில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாம்.
ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது. அடுத்து கோடை விடுமுறையில் 'காலா' வெளியாக உள்ளது.