கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்தினர் புதிய திரைப்படங்களின் வெளியீடு அக்டோபர் 6ம் தேதி முதல் இருக்காது என்று அறிவித்தனர். அன்றைய தினம் சுமார் 10 திரைப்படங்கள் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தன. தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்புக்கு தியேட்டர்காரர்களும் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து புதிய படங்கள் எதுவும் அகடோபர் 6ம் தேதி வெளியாகவில்லை. அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதனால், இரண்டாவது வாரமாக வெள்ளிக்கிழமையான இன்றும் எந்த புதிய படங்களும் வெளியாகவில்லை.
தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் 'மெர்சல், மேயாத மான்' ஆகிய திரைப்படங்கள் தீபாவளி வெளியீடு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. சசிகுமார் நடித்துள்ள 'கொடி வீரன்' படம் குறித்து இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களில் 'மெர்சல்' படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதால் வரும் தீபாவளி தினத்தில் மேலும் புதிய படங்கள் வெளியாகுமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.
டிக்கெட் கட்டண உயர்வு, கேளிக்கை வரி விதிப்பு குறித்து இன்னும் நிலையான முடிவு ஏற்படாததால் அடுத்த 5 நாட்களில் என்ன நடக்கும் என்பதும் திரையுலகத்தில் உள்ளவர்களுக்கே புரியாத புதிராக உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் போது இப்படித்தான் ஜுலை முதல் வாரம் புதிய படங்கள் வராமல் இருந்தது. இந்த அக்டோபர் மாதத்தில் இரண்டு வாரங்களாக புதிய படங்கள் வராமல் இருக்கிறது. படத்தை முடித்து வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் பல தயாரிப்பாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.