ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு, கேளிக்கை வரி ஆகிய விவகாரங்களில் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் சங்கங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
தியேட்டர்காரர்கள் கேளிக்கை வரி உயர்விற்கும், டிக்கெட் கட்டண உயர்விற்கும் ஆதரவளிக்கிறார்களாம். அதே சமயம், தயாரிப்பாளர் சங்கத்தினர் கேளிக்கை வரி உயர்விற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தியேட்டர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அரசிடம் பேசும் போது, தமிழக அரசின் முடிவுகள் அனைத்திற்கும் கட்டுப்படுகிறோம் என்கிறார்களாம். மேலும் விஷால் தலைமையில் செயல்படும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அவர்களது ஆதரவு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் புதிய விதிமுறைகள் என சிலவற்றை அறிவித்துள்ளனர்.
1. இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது:
2. அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்
3. கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்
4. அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்
5. தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்
6. பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது
7. விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்
மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. இன்று அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை வைக்கப்பட உள்ளது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் தியேட்டர்காரர்களின் கொள்ளைகளை எதிர்க்கும் அறிவிப்புகளாகும்.
தியேட்டர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் இடையே எழுந்துள்ள இந்த மோதலால் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.