ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் மீதான கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கு திரையுலகத்தைச் சார்ந்த சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதிய படங்களை வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து அதை பின்பற்றியும் வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக அரசுடன் தமிழ்த் திரையுலகச் சங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தன.
அரசு முதலில் 2 சதவீதம் மட்டுமே குறைக்க ஒப்புக் கொண்டதாகவும், அனைவரும் கேட்டுக் கொண்டதால் 5 சதவீதம் வரை குறைத்து இனி கேளிக்கை வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்றும் முடிவெடுத்துள்ளதாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள்.
அதோடு உயர்த்தப்பட்ட தியேட்டர் கட்டணங்களையும் முறைப்படுத்தவும் அரசு தயாராக இருப்பதாகத் தெரிகிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அளவிற்கு இல்லை என்றாலும், அவர்களுக்கு நெருக்கமாக அமையும் விதத்தில் தனி தியேட்டர்களுக்கான கட்டணங்கள் அமையும் என்கிறார்கள்.
டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தால் மக்கள் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவது மேலும் குறையும் என்று பலரும் கருதும் நிலையில், தனி தியேட்டர்காரர்கள் கட்டணங்களை உயர்த்துவதில் விடாப்பிடியாக இருப்பது பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைத்தளங்களில் இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.