ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழக அரசு கடந்த வாரம் தியேட்டர்களுக்கான டிக்கெட் கட்டண உயர்வை அறிவித்தது. அதில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் 160 ரூபாய் வரை டிக்கெட் கட்டணங்களை வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்ளன. 90 சதவீதம் வரை தனி தியேட்டர்களும், இரு தியேட்டர்களும் உள்ளன. இவற்றிற்கான கட்டண உயர்வு போதாது என்று தனி தியேட்டர்களை வைத்திருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கேளிக்கை வரி ரத்து, டிக்கெட் கட்டண உயர்வை முறைப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யவும் முயன்று வருகிறார்கள். ஆனால், இதற்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பு தர மறுப்பதாகத் தகவல். தங்களுக்குக் கிடைத்துள்ள டிக்கெட் கட்டண உயர்வு சரியாக இருப்பதாகவும், நாங்கள் ஏன் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்களாம்.
தனி தியேட்டர்களுக்கான டிக்கெட் கட்டண உயர்வு மாற்றியமைக்கப்படாத பட்சத்தில் அதன் உரிமையாளர்கள் தீபாவளிக்கு முன்னதாகவே வேலை நிறுத்தம் செய்யவும் தயாராகி வருகிறார்களாம். மல்டிபிளக்ஸ் தியேட்டர்காரர்களில் சிறிய படங்களுக்கு தியேட்டர்களைத் தருவதில் கெடுபிடி செய்வதால் சிறிய தயாரிப்பாளர்களும் மல்டிபிளக்ஸ் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து நடக்கும் பேச்சு வார்த்தையில் இதனால் இழுபறி நிலைமையே நீடிக்கிறதாம்.