பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பெரிய திரை காமெடி நடிகரும், சின்னத்திரை காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான தாடி பாலாஜி, நித்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். "ஜாதி பெயர் சொல்லி திட்டுகிறார், தினமும் குடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்துகிறார்" என்று நித்தியா, தாடி பாலாஜி மீது போலீசில் புகார் அளித்தார்.
"என் மனைவிக்கும் மனோஜ்குமார் என்பவருக்கும் தொடர்பு இருக்கிறது. என் மனைவியை பயன்படுத்தி என்னை மனோஜ்குமார் மிரட்டி வருகிறார்" என்று தாடி பாலாஜியும் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இருவரையும் நேற்று வில்லிவாக்கம் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். இருவரும் நேற்று போலீஸ் ஸ்டேஷன் வந்திருந்தனர். இருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். இருவரும் தங்கள் தரப்பு புகார்களை விரிவாக கூறியுள்ளனர். இந்த விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது. இதில் மனோஜ்குமார் இன்று விசாரிக்கப்படுகிறார்.
"இந்த விசாரணைகளுக்கு பிறகு போலீசார் இருவருக்கும் சமாதானம் செய்து வைப்பதா அல்லது இருவரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்வதா என்பதை முடிவு செய்வார்கள்" என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.