ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தங்களது தனிப் பெரும் திறமையால் ரசிகர்களிடம் தங்களுக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் மூன்று திரைப் பிரபலங்களுக்கு இன்று பிறந்த நாள். காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகளான ஹிந்தி நடிகை ரேகா, 'பாகுபலி' இயக்குனர் ராஜமௌலி, நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகிய மூவருக்கும் தான் இன்று பிறந்த நாள்.
சமூக வலைத்தளங்களில் இவர்கள் மூவருக்கும் பல்வேறு வாழ்த்துச் செய்திகளுடன் ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஹிந்தித் திரையுலகின் கனவுக் கன்னியாக விளங்கிய ரேகா, தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் உண்டு. இன்று அவருடைய 64வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ரேகா.
'பாகுபலி 2' படத்தின் மூலம் இந்தியத் திரையுலகில் முதல் முறையாக 1700 கோடி வரை வசூல் சாதனை புரிந்த படத்தைக் கொடுத்து தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இன்று அவருடைய 45வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
மதுரையிலிருந்து வந்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, அதன்பின் படிப்படியாக தன் திறமையை உயர்த்திக் கொண்டவர் வடிவேலு. இன்று பல மீம்ஸ்கள் உருவாகக் காரணமாக இருக்கும் அவருடைய நகைச்சுவை எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இன்று அவருடைய 58வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அழகு, பிரம்மாண்டம், நகைச்சுவை இந்த மூன்றும் தான் சினிமாவில் இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. அந்த மூன்றுக்கும் பெருமை சேர்த்தவர்கள் இவர்கள்.