சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
கேளிக்கை வரி விதிப்பு நீக்கம் மற்றும் திரையரங்க கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் ஒரு பெரிய போராட்டத்திற்கு தமிழ்த் திரையுலகம் தயாராகி வருகிறது.
கேளிக்கை வரி விதிப்பு பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே திரையுலக சங்கங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரண்டு வரி சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு விதிக்கக் கூடாது என அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். கேளிக்கை வரி விதிப்பு பற்றிய அறிவிப்பு வந்த அடுத்த சில நாட்களில், திரையுலகினர் ஏற்கெனவே கேட்டுக் கொண்டதற்கிணங்க டிக்கெட் கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பும் வெளியானது.
ஆனால், அந்த டிக்கெட் கட்டண உயர்வு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு மட்டும் நிறைவாக உள்ளதாகவும் மற்ற தியேட்டர்களுக்கு குறையாக உள்ளதாகவும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு எப்படி ஏற்றித் தந்தார்களோ அதே போல தங்களுக்கும் ஏற்றித் தர வேண்டும் என மற்ற தியேட்டர்காரர்கள் கூறி வருகிறார்கள்.
நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டம் நடைபெற்றது. அதில் கேளிக்கை வரியை நீக்க வேண்டும், டிக்கெட் கட்டண உயர்வு முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி பலன் கிடைக்காத பட்சத்தில் விஷால் தலைமையில் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடவும் ஒருங்கிணைந்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் என திரையுலகத்தினரிடமும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.