ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அதர்வா நடித்த 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படம் எதிர்பார்த்த அளவுக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அதர்வாவுக்கு பெரிய பாதிப்பில்லை. அந்தப்படத்தைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் 'இமைக்கா நொடிகள்' மற்றும் 'செம போத ஆகாதே' ஆகிய இரண்டு படங்கள் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன.
இவற்றில் 'செம போத ஆகாதே' அதர்வாவின் சொந்தப்படம். இந்தப்படம் நவம்பர் மாதம் ரிலீஸாகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அதர்வா நடித்துள்ள இன்னொரு படமான 'இமைக்கா நொடிகள்' கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் வெளியாகிறது. நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராக்ஷி கன்னா உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை 'டிமான்ட்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றமென்றில் நடித்திருக்கிறது.