‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
கடந்த வருடம் மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம் வெளியாகி, சூப்பர்ஹிட்டானதுடன் மலையாள சினிமாவின் வியாபார எல்லையை பலமடங்கு விரிவுபடுத்தியது. கடந்த அக்-7ஆம் தேதி வெளியான படத்தின் ஒரு வருட நிறைவு கொண்டாட்டம் மோகன்லால் ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப்படம் மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையை தக்க வைத்துக் கொண்டது.
மேலும் மோகன்லால் படத்திற்கு சின்னக் குழந்தைகள் எல்லாம் ரசிகர்களாக மாறிய மாயாஜாலத்தை இந்தப்படம் நிகழ்த்தி காட்டியது 'புலி முருகன்'. புலியின் மேல் மனிதனுக்கு உண்டான தீராப்பகையை மையமாக வைத்து இந்தப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் வைசாக். சுமார் 35 கோடியில் தயாரான இந்தப்படம் மொத்தமாக 15௦ கோடிக்கு மேல் வசூலித்து பிரமிப்பை ஏற்படுத்தியது.
பீட்டர் ஹெய்னின் கை வண்ணத்தில் சண்டைக்காட்சிகள், குறிப்பாக மோகன்லால் புலியுடன் மோதும் காட்சிகளும், க்ளைமாக்ஸில் இருபது நிமிட தொடர் சண்டைக்காட்சியும் தியேட்டர்களுக்கு ரசிகர்களை திரும்ப திரும்ப வரவைத்தன. ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல் மோகன்லாலுக்கு லைப் டைம் ரெக்கார்டாக அமைந்துவிட்டது இந்த 'புலி முருகன்'.