'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த வருடம் மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம் வெளியாகி, சூப்பர்ஹிட்டானதுடன் மலையாள சினிமாவின் வியாபார எல்லையை பலமடங்கு விரிவுபடுத்தியது. கடந்த அக்-7ஆம் தேதி வெளியான படத்தின் ஒரு வருட நிறைவு கொண்டாட்டம் மோகன்லால் ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப்படம் மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையை தக்க வைத்துக் கொண்டது.
மேலும் மோகன்லால் படத்திற்கு சின்னக் குழந்தைகள் எல்லாம் ரசிகர்களாக மாறிய மாயாஜாலத்தை இந்தப்படம் நிகழ்த்தி காட்டியது 'புலி முருகன்'. புலியின் மேல் மனிதனுக்கு உண்டான தீராப்பகையை மையமாக வைத்து இந்தப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் வைசாக். சுமார் 35 கோடியில் தயாரான இந்தப்படம் மொத்தமாக 15௦ கோடிக்கு மேல் வசூலித்து பிரமிப்பை ஏற்படுத்தியது.
பீட்டர் ஹெய்னின் கை வண்ணத்தில் சண்டைக்காட்சிகள், குறிப்பாக மோகன்லால் புலியுடன் மோதும் காட்சிகளும், க்ளைமாக்ஸில் இருபது நிமிட தொடர் சண்டைக்காட்சியும் தியேட்டர்களுக்கு ரசிகர்களை திரும்ப திரும்ப வரவைத்தன. ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல் மோகன்லாலுக்கு லைப் டைம் ரெக்கார்டாக அமைந்துவிட்டது இந்த 'புலி முருகன்'.