‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். இதனால் அவர்களது ரசிகர்கள் அந்த படங்களை அதிகமாக எதிர்பார்ப்பதோடு பெரிய ஓப்பனிங்கையும் கொடுத்து வருகிறார்கள். ஆனால், தற்போது முன்னணி நடிகராக விட்ட விஜய் சேதுபதி வருடத்திற்கு நான்கைந்து படங்களை கொடுத்து விடுகிறார். அதோடு, அவர் கெஸ்ட் ரோலில் நடித்த சில படங்களும் வெளியாகி விடுகிறது.
இதுகுறித்து விஜயசேதுபதி கூறுகையில், எனக்கும் என் படம் எப்போது வரும் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. ஆனால், நட்பு வட்டார டைரக்டர்களின் அன்புக்கு இணங்க பல படங்களில் நடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வருகிறது. என்றாலும், இந்த நிலையை இனிமேல் தொடர விடமாட்டேன். காரணம், என் முகத்தை அடிக்கடி பார்த்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். ஏனென்றால் நான் சுமார் மூஞ்சி குமாரு என்பது எனக்குத் தெரியும். அதனால் இனிமேல் நானும் பட எண்ணிக்கையை குறைத்து ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கப்போகிறேன் என்கிறார் விஜய் சேதுபதி.