‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
துல்கர் சல்மான் நடித்துள்ள சோலோ படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தநிலையில் பாலிவுட்டிலும் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ள துல்கர், 'கர்வான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
தவிர இந்தப்படத்தில் இர்பான்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மிதிலா பார்க்கர் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷுடன் 'புரூஸ்லீ' படத்தில் கதாநாயகியாக நடித்த க்ரீத்தி கர்பந்தா துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
இந்தப்படம் வெவ்வேறு வாழ்க்கை பின்னணியில் இரண்டு நண்பர்களை பற்றிய கதையாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் நடைபெற்று தற்போது இன்னும் ஓரிரு தினங்களில் முடிவடைய இருக்கிறது.
இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள நாயகி மிதிலா பார்க்கர், படப்பிடிப்பு முடியப்போவதை நினைத்து இப்போதே அழுகை அழுகையாய் வருவதாக கூறியுள்ளார். மேலும் துல்கர், இர்பான் இருவரும் படப்பிடிப்பின் போது காட்டிய அன்பும் நட்பும் மறக்க முடியாதது என்றும், இருவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்றும், வாழ்க்கையில் நினைத்து மகிழத்தக்க இனிய நினைவுகள் இந்தப்படத்தின் மூலம் தனக்கு கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார் மிதிலா பார்க்கர்.