மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கவுரி லங்கேஷ் என்ற பிரபல பெண் பத்திரிக்கையாளர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் நடிகர் பிரகாஷ்ராஜின் நெருங்கிய தோழி. இந்த கொலை தொடர்பாக பிரதமர் மவுனம் காக்கிறார். அந்த விஷயத்தில் அவர் என்னை விட பெரிய நடிகராக இருக்கிறார். என்று பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்தை எதிர்த்து லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது:
நான் பிரதமர் மோடிக்கு எதிரானவன் என்கிறார்கள். பிரதமர் மோடி இந்த நாட்டின் பெரும்பாலான மக்களால் தேர்வான ஒரு தலைவர். இந்த நாட்டின் குடிமகன் மற்றும் நடிகர் என்ற முறையில் அவருடன் மாறுபட எனக்கு உரிமை உள்ளது. அவர் கட்சி சார்ந்தவர் அல்ல. மதச்சார்பற்ற நாட்டின் பிரதிநிதியாக இருப்பவர். ஜனநாயக நாட்டில் அவர், கவுரி கொலை விவகாரத்தில் மவுனமாக இருப்பதை பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில் என்னால் அமைதியாக இருக்க இயலவில்லை.
நான் ஜனநாயகத்தை நம்புகிறேன். இந்த நாட்டில் நடப்பதில் இருந்து நான் பாடம் கற்றுள்ளேன். எனவே எனக்கு எப்போது, எங்கே அவசியம் என்று தோன்றுகிறதோ அப்போது நான் தொடர்ந்து பேசுவேன். என் மனதில் பட்டதை துணிந்து சொல்வேன். எனது கருத்தை வெளியிட உரிமையும், சுதந்திரமும் உள்ளது. வழக்குகளை கண்டு பயப்பட மாட்டேன். என்றார் பிரகாஷ்ராஜ்.