ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழக அரசு திரைப்படங்களுக்கு 10 சதவிகித கேளிக்கை வரி விதித்திருப்பதை கண்டித்து இன்று முதல் புதிய படங்களை வெளியிடப்போவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இன்று வெளியாவதாக இருந்த 7 சிறுபட்ஜெட் படங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. உறுதி கொள், கடைசி பென்ஞ் கார்த்திக், களத்தூர் கிராமம், திட்டிவாசல், உப்பு புளி மிளகாய், அழகின் பொம்மி, விழித்திரு ஆகிய படங்கள் இன்று வெளிவருவதாக இருந்தது. இந்த படங்கள் இன்று வெளிவராமல் நிறுத்தப்பட்டது.
இவற்றில் விழித்திரு படமும், களத்தூர் கிராமம் படமும் பலமுறை சில பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு ஒருவழியாக இன்று வெளிவருவதாக இருந்த படங்கள். விழித்திரு படத்தின் இயக்குனர் மீரா கதிரவன் நேற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்து கண்ணீர் விட்டு அழுததாக கூறப்படுகிறது.
"யாரோ ஆடும் சூதாட்டத்திற்கு நாங்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளோம்" என்று அவர் தனது பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார். தற்போது நிறுத்தப்பட்டுள்ள படங்கள் மீண்டும் திரைக்கு வரும்போது உரிய உதவிகள் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது.
நேற்று வெளியான துல்கர் சல்மான் நடித்த சோலோ படம் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. இதனை அதன் இயக்குனர் பிஜாய் நம்பியார் வேதனையுடன் தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். போராட்டம் இன்று முதல் தான் ஆரம்பம். அப்படியிருக்கும்போது நேற்று வெளியான படத்தை ஏன் தடை செய்ய வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையில் வருகிற தீபாவளிக்கு விஜய் நடித்த மெர்சல், சசிகுமார் நடித்த கொடிவீரன், பரத் நடித்த பொட்டு, ஆகிய படங்கள் தீபாவளி ரிலீசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில படங்கள் இந்த பட்டியலில் சேர இருக்கிறது.
தற்போது இந்தப் படங்கள் தீபாவளி ரிலீசுக்கு தயக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக மெர்சல் படம் தீபாவளி ரிலீஸ் எனக் கூறி பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. மெர்சல் தீபாவளிக்கு ரிலீசாகாவிட்டால் அந்த தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள்.