ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தேசிய விருது பெற்ற நடிகர் என்ற பெருமையை பெற்றவர், பாபி சிம்ஹா. ஹீரோ, வில்லன் என, எந்த அடையாளத்துக்குள்ளும் முடங்காமல், நல்ல நடிகர் என, ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டவர். தன் திரையுலக அனுபவம் குறித்தும், சமீபத்தில் வெளிவந்த, கருப்பன் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், அவர் பகிர்ந்ததாவது:
கருப்பன் படத்தில் கதை கேட்காமலேயே நடிக்க சம்மதித்தீர்களாமே?
ஆமாம், விஜய் சேதுபதிக்கும், எனக்கு மான நட்பு, இப்போது துவங்கியது இல்லை. சினிமாவுக்கு வரும் முன், இருவரும் இணைந்து, 10க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்து உள்ளோம். இருவருக்குமே ஒரு புரிதல் உண்டு. அந்த அடிப்படையில் தான், கருப்பன் படத்தில் நடிக்க, விஜய் சேதுபதி அழைத்த போது, கதை கேட்காமலேயே நடிக்க சம்மதித்தேன்.
வில்லன், ஹீரோ எந்த ரோலில் நடிப்பது பாதுகாப்பானதாக நினைக்கிறீர்கள்?
அப்படி பிரித்து பார்க்க முடியவில்லை. எந்த ரோல் கிடைத்தாலும், அதில் என்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் பார்ப்பேன். கருப்பனில் வில்லனாக நடித்தேன்; திருட்டுப் பயலே - 2ல், ஹீரோவாக நடிக்கிறேன். கருப்பனில் நான் நடித்த சில காட்சிகளில், ரசிகர்கள் கைதட்டி பாராட்டுகின்றனர்; இது தான் எனக்கு வேண்டும்.
இரண்டு ஹீரோ கதைகளில் நடிக்க தயக்கம் இல்லையா?
எனக்கு அந்த பயம் இல்லை. நன்றாக வருமா; சரியாக இருக்குமா என யோசித்தாலே, நாம் தோற்றுப் போய் விடுவோம். முதலில், நம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். புதுமுகம், பழைய முகம்; அந்த இயக்குனர், இந்த இயக்குனர் என, எதைப் பற்றியும் யோசிக்க மாட்டேன்.
சமீபத்தில் நீங்க நடித்த படத்தில் ரொம்ப பிடித்தது எது?
திருட்டு பயலே - 2. கதை கேட்டதுமே ஷாக் ஆயிட்டேன். இப்படி ஒரு கதை எதற்கு... நம்மைச் சுற்றி, இவ்வளவு விஷயங்கள் நடக்குதா என, யோசித்தேன். அமலா பால், எனக்கு ஜோடி; பிரசன்னா வில்லனாக நடிக்கிறார். இதுவரை நடிக்காத ரோல் எனக்கு கிடைத்துள்ளது; இதற்காக, இயக்குனர் சுசி கணேசனுக்கு நன்றி.
குறும்படங்கள் என்ற கேட்டை, தமிழ் சினிமாவில் உங்களை போன்றவர்கள் தான் திறந்து வைத்தீர்கள்; இப்போது நிலவரம் எப்படி இருக்கு?
இப்போது இந்த திரைத்துறையே சிறப்பாக இருக்கு என்று தான் சொல்வேன். புதுப்புது படைப்பாளிகள் வருகின்றனர்; அனைவருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. வெவ்வேறு கதைக்களம் உருவாகிறது.
ஒரு மொபைல் போன் இருந்தாலே, படம் எடுத்துடறாங்க என்ற குற்றச்சாட்டு குறித்து...
இதற்கு முக்கிய காரணம், தொழில்நுட்பம் வளர்ந்தது தான். இப்போது, ஐ - போனில் கூட படம் எடுக்க முடியும். அதற்கான எல்லா வசதியும் அதில் இருக்கு. நாங்கள் படம் எடுக்கும் போது, கேமராவை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலை இருந்தது. அதற்கு, செலவு செய்ய வேண்டும். இதனால், பல திறமைசாலிகள், வேறு வேலைக்கு போயினர். இப்போது, ஒரு மொபைல் போனிலேயே எல்லாவற்றையும் எடுத்து விடலாம். தொழில்நுட்பம் வளர வளர, கற்பனையும் அதிகமாகி கொண்டே போகிறது; மொத்தத்தில், இப்போது, சினிமா கொஞ்சம் எளிதாகி விட்டது.
நீங்கள் தீவிரமான ரஜினி ரசிகர்; ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா?
ரஜினி அரசியலுக்கு வந்தால், என்ன தப்பு; ரஜினி மட்டுமல்ல; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி, தான் நடித்த படங்களில், மக்களுக்கான தேவைகளை சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர்., போன்றவர்கள், சினிமாவில் இருந்து தானே, அரசியலுக்கு வந்தனர். மக்களிடம் அறிமுகமாவதற்கு, சினிமா உதவுகிறது; அந்த விசிட்டிங் கார்டு, ரஜினியிடம் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய, யார் வந்தாலும் வரவேற்பேன்.