ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வில்லனாக நடித்து வந்த பாபி சிம்ஹா பின்னர் கதாநாயகனாக மாறினார். ஆனால் அவரால் கதாநாயகனாக தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே மீண்டும் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். அவர் வில்லனாக நடித்த கருப்பன் படம், கடந்த வாரம் வெளியான நிலையில், பாபிசிம்ஹா ஹீரோவாக நடித்த 'திருட்டுப் பயலே-2' விரைவில் வெளியாக உள்ளது.
இந்தப் படம் வெளியாகும் நேரத்தில் கருப்பன் படம் வெளியானது 'திருட்டுப் பயலே-2' படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் திருட்டுப்பயலே- 2 படத்துக்கு சென்சாரில் 'U/A' சர்டிஃபிக்கேட் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து 'திருட்டுப் பயலே-2'வை வெளியிடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளிக்குப் பிறகு அதாவது நவம்பர் 3-ஆம் தேதி இந்த படத்தை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 'திருட்டுப் பயலே' முதல் பாகத்தை தயாரித்த 'ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மென்ட்' நிறுவனமே 'திருட்டுப் பயலே-2'வை தயாரித்துள்ளது.
அதே நாளில், சுசீந்திரன் இயக்கத்தில் 'மாநகரம்' சந்தீப் கிஷன், மெஹரின், விக்ராந்த், சூரி நடித்துள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' வெளியாகவிருக்கிறது. இதனால் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.