ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழக அரசு திரையரங்குகளுக்கு 10 சதவிகிதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. ஏற்கனவே 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி கட்டும் தியேட்டர்களால் மேலும் சுமையை தாங்க முடியாது என்று கூறி நாளை முதல் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
இந்த நிலையில் திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நேற்று பிலிம் சேம்பரில் நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கலந்து கொண்டன. இதில் திரைப்பட வேலை நிறுத்தம், தியேட்டர்கள் மூடல், புதிய படங்கள் வெளியிடாமல் இருத்தல் போன்றவை குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
சினிமாவிற்கு ஏற்கெனவே மத்திய அரசு 28 சதவீதம் கேளிக்கை வரி விதித்து உள்ளது. தமிழக அரசும் 10 சதவீதம் கேளிக்கை வரி விதிப்பதாக அறிவித்து உள்ளது. மொத்தம் 38 சதவீதம் வரியை எங்களால் செலுத்த முடியாது. எனவே, தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கூடி இது குறித்து ஆலோசித்தோம். நாங்கள் எடுத்த முடிவின்படி வருகிற 6-ந் தேதி (நாளை) முதல் புதிய தமிழ் படங்களை வெளியிடுவது இல்லை என்று தீர்மானித்திருக்கிறோம்.
ஏற்கனவே அரசிடம் கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தோம். அப்படியிருந்தும் 10 சதவீதம் கேளிக்கை வரி விதித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மற்ற மாநிலங்களில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படவில்லை. தமிழகத்தில் மட்டும் தான் இந்த வரியை விதித்து உள்ளனர். வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் 38 சதவீதம் வரியை அரசுக்கு செலுத்திவிட்டு நஷ்டப்பட முடியாது என்பதால், வேறு வழியின்றி புதிய படங்கள் வெளியிடுவதை நிறுத்துகிறோம். கேளிக்கை வரியை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
சிவாஜி மணிமண்டபம் திறக்கப்பட்டதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்தோம். 10 சதவீதம் கேளிக்கை வரி விதித்து தமிழ் சினிமாவுக்கும் மணிமண்டபம் கட்டிவிடாதீர்கள் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம். இரட்டை வரி விதிப்பை திணிப்பது தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தும். எனவே, அரசு மறுபரிசீலனை செய்து கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்புவோம்.
இவ்வாறு விஷால் கூறினார்.