மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலில் களம் இறங்க உள்ள நிலையில் தனது ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை, ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து கமல் ஆலோசித்து இருக்கிறார்.
இந்த சந்திப்பின் போது தமது அரசியல் பயணம் எவ்வாறு இருக்க போகிறது, அதற்கு ரசிகர்கள் செய்ய வேண்டியது என்ன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சுமார் 300 கமல் நற்பணிமன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கமல் உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல் நற்பணிமன்ற நிர்வாகிகள், அரசியல் குறித்து கமல் எதுவும் பேசவில்லை. தற்போது செய்து வரும் நற்பணிகளை இன்னும் அதிகப்படுத்தும் படி கூறினார். அரசியலுக்கு வருவதை அவர் பார்த்து கொள்வார். நவ., 7-ம் தேதி கமலின் பிறந்தநாளில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றனர்.
அநேகமாக கமலின் பிறந்தநாளில் அவரின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.