தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் 'துருவங்கள் பதினாறு' போல சில வித்தியாசமான படைப்புகளுக்கு தனது நடிப்பால் உயிர் கூட்டியவர் தான் நடிகர் ரகுமான். மலையாள திரையுலகில் சில காலம் ஹீரோவுக்கு நண்பனாக, இல்லையென்றால் வில்லன்களில் ஒருவராக பயன்படுத்தி வந்தார்கள். ராஜேஷ் பிள்ளை, ரோஷன் ஆண்ட்ரூஸ் போன்ற ஒரு சில இயக்குனர்கள் தான் ரகுமானை வேறு பரிமாணத்தில் காட்டினார்கள். அப்படி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய மும்பை போலீஸ் படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ரகுமான்.
அந்தப்படத்தில் நாயகன் பிருத்விராஜுக்கு இணையாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் பிருத்விராஜுடன் இணைந்து 'ரணம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் நிர்மல் சகாதேவ் இயக்குகிறார். இந்தப்படத்தில் ரகுமானுக்கு மட்டுமல்ல, மலையாள சினிமாவிலேயே யாரும் நடித்திராத ஒரு கேரக்டரை கொடுத்துள்ளாராம் நிர்மல் சகாதேவ். முழுக்க முழுக்க வெளிநாட்டில் இந்தப்படம் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.