நானி படத்துக்காக பிரமாண்ட குடிசை செட் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா | பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு | பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார் | தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் | 'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா |
தமிழ் சினிமாவில் 'துருவங்கள் பதினாறு' போல சில வித்தியாசமான படைப்புகளுக்கு தனது நடிப்பால் உயிர் கூட்டியவர் தான் நடிகர் ரகுமான். மலையாள திரையுலகில் சில காலம் ஹீரோவுக்கு நண்பனாக, இல்லையென்றால் வில்லன்களில் ஒருவராக பயன்படுத்தி வந்தார்கள். ராஜேஷ் பிள்ளை, ரோஷன் ஆண்ட்ரூஸ் போன்ற ஒரு சில இயக்குனர்கள் தான் ரகுமானை வேறு பரிமாணத்தில் காட்டினார்கள். அப்படி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய மும்பை போலீஸ் படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ரகுமான்.
அந்தப்படத்தில் நாயகன் பிருத்விராஜுக்கு இணையாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் பிருத்விராஜுடன் இணைந்து 'ரணம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் நிர்மல் சகாதேவ் இயக்குகிறார். இந்தப்படத்தில் ரகுமானுக்கு மட்டுமல்ல, மலையாள சினிமாவிலேயே யாரும் நடித்திராத ஒரு கேரக்டரை கொடுத்துள்ளாராம் நிர்மல் சகாதேவ். முழுக்க முழுக்க வெளிநாட்டில் இந்தப்படம் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.