ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழக அரசு 10 சதவிகிதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. ஏற்கெனவே தியேட்டர்கள் 18 மற்றும் 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி கட்டி வருகிறது. இதனால் தியேட்டர் வசூலில் 38 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டியுள்ளது. மீதமுள்ள 62 சதவிகிதத்தைத்தான் தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர், விநியோகஸ்தர் பங்கிட்டு கொள்ள வேண்டும். இதனால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
இந்த வரிவிதிப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே தியேட்டர்களை மூட உரிமையாளர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் வெள்ளிக்கிழமை புதிய படங்கள் வெளியாகி இருந்தது. அதோடு 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் தியேட்டருக்கு வரும் மக்கள் கூட்டம் ஏமாந்து திரும்பும் போன்ற காரணங்களால் தங்கள் வேலை நிறுத்தத்தை தியேட்டர் அதிபர்கள் நிறுத்தி வைத்தனர்.
தற்போது விடுமுறைக்காலம் முடிந்து விட்டதால் தியேட்டர்கள் மூடல் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இன்று முதல் தியேட்டர்களை மூடுகிறது என்ற செய்திகள் நேற்று வெளியானது. என்றாலும் இந்த செய்தி முறைப்படியான இடங்களிலிருந்து வெளிவரவில்லை. ஒரு சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தவிர பிவிஆர்., ஐநாக்ஸ் உள்ளிட்டவைகள் இன்று முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வரை சந்தித்து கேளிக்கை வரியை நீக்கச் சொல்லி மீண்டும் வலியுறுத்துவது என்றும், தீபாவளி முடியும் வரை தியேட்டரை மூட வேண்டாம் என்றும், தீபாவளிக்கு பிறகு பெரிய அளவிலான போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையை கவனித்துக் கொண்டிருக்கும் ரிலீசுக்கு தயராக இருக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.