ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை, தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
சென்னை அடையாறில் ரூ.2.80 கோடி மதிப்பில் அரசு சார்பில் நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் சிவாஜி கணேசன் நினைவைப் போற்றும் வகையில் அரிய பல புகைப்படங்கள் இந்த மணிமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன. கோர்ட் உத்தரவுபடி அகற்றப்பட்ட சிவாஜியின் திருவுருவச் சிலையும் இந்த மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, நடிகர் ரஜினி, கமல், நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி, நடிகர்கள் விஜயகுமார், சரத்குமார், சூர்யா, சத்யராஜ், நடிகை ராதிகா, சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளனர். திமுக.,வைச் சேர்ந்த எவரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
மணிமண்டபத்தில் சிவாஜியின் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜியின் படத்திற்கு அமைச்சர்கள், நடிகர் சங்கத்தினர், நடிகர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.