வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பரத், அதன்பின்னர் காதல் படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சில வெற்றி படங்களை கொடுத்தவர், தற்போது வெற்றிக்காக போராடி வருகிறார். வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நாளைய இயக்குநர் சீசன் 3 போட்டியில் இறுதிபோட்டி வரை சென்ற ஸ்ரீ செந்தில் இயக்கும் முதல் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் பரத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை கவனிக்கிறார் சுரேஷ் பாலா. லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது.
படத்தைப் பற்றி ஸ்ரீ செந்தில் பேசும் போது,' சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நாயகி தேர்வு நடக்கிறது என்றார்.