ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் திறப்பு விழாவிற்கு ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த விழாவிற்கு திமுக., தலைவரையும் அழைப்பார்கள் என நம்புகிறோம் என்று நடிகர் பிரபு கூறினார்.
நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் தமிழக அரசின் சார்பில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாளான அக்., 1ம் தேதி திறந்து வைக்கப்படும் என்றும், அன்று காலை 10.30 மணிக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் திறந்து வைப்பார்கள் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இது சிவாஜி ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வேதனை அளித்துள்ளது. மேலும் திரையுலகினர் உள்ளவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சினிமாவின் மாபெரும் கலைஞனின் விழாவில் முதல்வர் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் நேரில் சென்று திறந்து வைத்திருப்பார் என்றெல்லாம் குரல்கள் எழுந்தன.
இதையடுத்து, சிவாஜி மணிமண்டப விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார், அவர் மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சிவாஜி குடும்பத்தார் வரவேற்றனர்.
இதுகுறித்து நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தார், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் பிரபு, முதல்வர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். சேலத்தில் நடக்கும் எம்ஜிஆர்., நூற்றாண்டு விழாவில் பங்கேற்க இருப்பதாக ஏற்கனவே ஒப்புக்கொண்டு விட்டேன். அதனால் வரமுடியவில்லை. துணை முதல்வர் பன்னீர் செல்வம் விழாவை துவக்கி வைப்பார் என்றார். இதை நாங்களும் வரவேற்கிறோம்.
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. திமுக., தலைவர் கருணாநிதி சிலையை வைத்தார். இப்போது இரண்டு நிகழ்வும் ஒன்றாக நடக்க இருக்கிறது. மணிமண்டப திறப்பு விழாவுக்கு திமுக தலைவரையும் அழைப்பார்கள் என நம்புகிறோம். இந்த விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வேண்டும். சிவாஜியின் அன்புள்ளவர்கள் அனைவரும் மணிமண்டப விழாவில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு பிரபு கூறினார்.