மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கோலிசோடா படத்தின் ஹிட்டுக்குப்பிறகு விஜய்மில்டன் இயக்கிய படம் 10 எண்றதுகுள்ள. இப்படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து கடுகு என்ற படத்தை இயக்கினார். டைரக்டர் ராஜகுமாரன், பரத், சுபிக்ஷா, ராதிகா பிரசித்தா, பரத் சீனி உள்பட பலர் நடித்தனர். இப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்து. தற்போது கோலிசோடா-2 படத்தை இயக்கி வருகிறார் விஜய்மில்டன்.
இந்த படத்தில் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக இன்னொரு முக்கியமான வேடத்தில் விஜய்மில்டனின் தம்பி பரத் சீனி நடிக்கிறார். கடுகு படத்தில் அனிருத் என்ற ரோலில் நடித்த அவருக்கு இந்த படத்தில் அதை விட பெரிய வேடமாம். அதோடு சுபிக்ஷா அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
இதுபற்றி பரத்சீனி கூறுகையில், டைரக்டர் லிங்குசாமி படங்களில் நான் உதவி இயக்குனராக ஒர்க் பண்ணியிருக்கிறேன். அதனால் டைரக்டராக வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. கடுகு படத்தில் எதிர்பாராதவிதமாக நடிகராகி விட்டேன். ரசிகர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக தற்போது மீண்டும் கோலிசோடா-2விலும் நடிக்கிறேன். இந்த படம் என்னை இன்னும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் பரத் சீனி.