ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போதுள்ள கல்வி முறை, குறிப்பாக மருத்துவ கல்லூரி, மருத்துவ படிப்பு தொடர்பாக ஏராளமான படங்கள் தயாராகி வருகிறது. இதில் பொட்டு வித்தியாசமான படம். காரணம் இதில் மருத்துவக் கல்லூரி ஒன்றின் கருப்பு பக்கத்தை காட்டுவது பேய். சாட்டை படத்தை தயாரித்த ஷலோம் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படத்தில் பரத் ஹீரோ. நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே என மூன்று ஹீரோயின்கள். இவர்கள் தவிர தம்பி ராமய்யா, நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, ஷாயாஜி ஷிண்டே உள்பட பலர் நடிக்கிறார்கள். இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரீஷ் இசை அமைக்கிறார்.
இனியா ஒரு மலைவாழ் பெண். அந்த இனத்திலிருந்து மருத்துவம் படிக்க தேர்வாகும் மாணவி. அரசு கோட்டாவில் சேரும் இனியாவை கல்லூரியை விட்டு விரட்டிவிட்டால் ஒரு சீட் காலியாகும், கோடிக் கணக்கில் தரத் தயாராக இருக்கும் ஒருவருக்கு அந்த சீட்டை கொடுக்கலாம் என்று திட்டமிடுகிறது கல்லூரி நிர்வாகம். இனியாவை விரட்ட எடுக்கும் முயற்சியில் அவர் இறந்து விடுகிறார். அவரது ஆவி அதே மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பரத் மீதும், சிருஷ்டி டாங்கே மீதும் வந்து எப்படி பழிவாங்குகிறது என்பதுதான் கதை. பேயை விரட்ட கல்லூரி நிர்வாகம் அழைத்து வரும் அகோரிதான் நமீதா. இந்த மாதிரி கதை இருக்கும் என படக்குழு வட்டாரத்தில் பேசப்படுகிறது.
படம் குறித்து இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது: படத்தில் பரத், சிருஷ்டி டாங்கே இருவரும் மருத்துவ கல்லூரி மாணவர்களாக நடிக்கிறார்கள். அகோரியாக நமீதா நடிக்கிறார். இனியா மலைவாசி பெண்ணாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கரமான ஹாரர் படமாக பொட்டு உருவாகி உள்ளது. என்கிறார் வடிவுடையான்.