ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரின் பாசறையில் இருந்து வந்தவர் கிரேன் மனோகர். சினிமா படப்பிடிப்பில் கிரேன் ஆபரேட்டராக இருந்து வந்த அவர் கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களில் நடிக்கத் தொடங்கியவர் பின்னர் பரவலாக மற்ற டைரக்டர்களின் படங்களிலும் நடித்து வந்தார்.
வடிவேலு உள்ளிட்ட மெகா காமெடியன்களின் கூட்டணியில் நடித்து பிரபலமான கிரேன் மனோகர், இதுவரை காமெடி வேடங்களிலேயே நடித்திருக்கும் நிலையில், தற்போது இன்னும் பேசுமா என்றொரு படத்தில் முதன்முறையாக குணசித்ர வேடத்தில் நடித்துள்ளார்.
இதுபற்றி கிரேன் மனோகர் கூறுகையில், தொடர்ந்து காமெடி வேடங்களிலேயே நடித்து வந்த என்னை இன்னும் பேசுமா என்ற படத்தில் ஒரு குணசித்ர வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். டைரக்டர் மணிவண்ணன் நடிப்பது போன்ற வேடம். கதைப்படி ஷேர் ஆட்டோ டிரைவராக நடித்துள்ள நான், கதையில் முக்கிய பங்கு வகிக்கிறேன். ஒரு தத்துவப்பாடலிலும் நடித்திருக்கிறேன். அந்த பாடல், திருமணமாகாத ஏழை பெண்களைப்பற்றிய கருத்தினை கொண்டது.
அந்த வகையில், இதுவரை ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த நான் இந்த படத்தில் முதன்முறையாக கண்கலங்க வைக்கும் வகையில் நடித்திருக்கிறேன். முதன்முறையாக இந்த மாதிரி மனசைத் தொடும் ஒரு வேடத்தில் நடித்தது எனக்கு மனதளவில் திருப்தியை கொடுத்துள்ளது என்கிறார் கிரேன் மனோகர்.