ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இணையதளத்தில் தற்போது புதிதாக வந்துள்ள புதிய செயலி (ஆப்) ஸ்மூல். இதன் மூலம் தங்களுக்கு பிடித்த பாடல்களை ரசிகர்கள் அதன் ஒரிஜினல் இசையுடன் பாடி பதிவேற்றம் செய்ய முடியும். இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்களை ரசிகர்கள் அதிகம் பாடி பதிவேற்றம் செய்து வருகிறார்கள். இந்த செயலி மூலம் சில பாடல்களை மட்டுமே இலவசமாக பாட முடியும் மற்ற பாடல்களை பாட மாதம் 110 ரூபாய் ஸ்மூல் செயலிக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதற்கு இளையராஜா தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு ஸ்மூல் செயலிக்கு மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்மூல் செயலியிலிருந்து இளையராஜா பாடல்கள் நீக்கப்பட்டு விட்டது. இது குறித்து இளையராஜா தரப்பில் கூறப்படுவதாவது:
இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு சொந்தமானது தான். யூடியூம், வாட்ஸ் அப் மூலம் இளையராஜா பாடல்களை பதிவேற்றியும், கேட்டும் வருகிறார்கள். அவர்களின் இந்த மகிழ்ச்சிக்கு தடைபோடவில்லை. ஆனால் இளையராஜா பாடல்களை பயன்படுத்தி ஒரு சிலர் பணம் சம்பாதிப்பதையே எதிர்க்கிறோம். அவரின் 35 வருட உழைப்பை யாரும் சுரண்ட அனுமதிக்க முடியாது. இதுகுறித்து ஸ்மூல் செயலியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்களின் விளக்கத்திற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்கிறார்கள்.