கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
'பாகுபலி' படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் படம் குறித்து இதுவரை அதிகார பூர்வமான தகவல் வெளியாகவில்லை. அடுத்த படத்தின் கதை எப்படிப்பட்டது, யார் ஹீரோ... என்பது போன்ற தகவல்கள் வெளியாகாமலே உள்ளன.
இந்நிலையில் ராஜமவுலி அடுத்து இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் மகேஷ் பாபுவே உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மகேஷ் பாபு நடிப்பில் 27.09.2017 அன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் 'ஸ்பைடர்' படம் வெளியாகவுள்ளது. 'ஸ்பைடர்' படத்தை தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் 'பாரத் அனே நானு' என்ற படத்தில் நடிக்கிறார் மகேஷ் பாபு.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் தற்போது மகேஷ்பாபு பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்திலும் மகேஷ் பாபு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் ஏற்கனவே வெளியாகின.
இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் அதாவது அடுத்த ஆண்டு இறுதியில் ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் மகேஷ் பாபு. படம் அடுத்த வருடம் தொடங்கினாலும் இந்த படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.