கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சிவாஜி பிறந்தநாளில்(அக்.,1), அவரின் மணி மண்டம் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் கம்பீரம் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே இடம் ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கம் மணி மண்டபம் கட்டுவதற்கு காலம் தாழ்த்தியது. இதனால் சிவாஜி மணி மண்டபத்தை அரசே கட்டும் என்ற அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 2,120 சதுர அடியில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் பணி கடந்த மே மாதம் நிறைவடைந்தது.
இதனிடையே சென்னை கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் சிவாஜி சிலையும் அங்கிருந்து அகற்றப்பட்டு மணி மண்படத்திற்கு கொண்டு வரப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில் திறப்பு விழா குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
வருகிற அக்டோபர் 1ந் தேதி சிவாஜியின் 90-வது பிறந்தநாள். அன்றைய தினமாவது மணி மண்டபம் திறக்கப்படுமா என சிவாஜி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அக்டோபர் 1-ம் தேதி சிவாஜி மணி மண்டம் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மணி மண்டபத்தை திறந்து வைக்கிறார்.