ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டெங்கு மரணத்தை கட்டுப்படுத்தாவிட்டால் ஆட்சிப்பொறுப்பிலிருந்து அரசு விலக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கோபாலபுரம் பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். இதுகுறித்து டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டதாவது: டெங்கு காய்ச்சலை தடுக்க நான் கூறியது, செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டது. டெங்கு மரணத்தை தவிர்க்க அரசால் முடியவில்லை என்றால், ஆட்சி பொறுப்பிலிருந்து விலக வேண்டும்.
விழித்துக்கொள்ளுங்கள் : தற்போது அரசு தூங்கிக்கொண்டுள்ளது; பெற்றோர்களே விழித்துக் கொள்ளுங்கள். இனி நாம் தான் நமக்கு காவலர்கள். கேள்விக்கு பதில் கிடைக்காதவரை மக்கள் விட்டுவிடக்கூடாது.
இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.