ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஒரு காலத்தில் குத்தாட்ட நடிகையாவும், கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தவர் ஜோதிமீனா. பிரபல கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் மகள். தற்போது அவர் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் அதிலிருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். சென்னை தி.நகரில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ஜோதிமீனா பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் நள்ளிரவில் என் வீட்டுக்குள் புகுந்த 3 பேர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள். என்னை கொலை செய்து விடுவதாகவும் சொன்னார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார்.
போலீஸ் விசாரணையில் வீட்டுக்குள் புகுந்த 3 பேரும் ஜோதிமீனாவின் நண்பர்கள் எனவும். வேறொரு பிரச்சினையில் இருவரும் ஜோதிமீனாவை மிரட்டியதும் தெரியவந்தது. இந்த நிலையில் தான் கொடுத்த புகாரை ஜோதிமீனா வாபஸ் பெற்றுக் கொண்டார்.