ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. அதையடுத்து நடித்த அங்காடித்தெரு அவரை முன்னணி நடிகையாக்கியது. பின்னர் எதிர்பார்த்தபடி முன்னணி ஹீரோக்களின் படங்களில் அஞ்சலி நடிக்கவில்லை என்றபோதும், அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். தற்போது பேரன்பு, காளி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி.
இந்த நிலையில், அஞ்சலியின் தங்கை ஆரத்யாவும் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறாராம். ஆனால், அஞ்சலி ஆரம்பத்தில் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த நிலையில், ஆரத்யாவோ கதைக்கேற்ற கிளாமருக்கு நான் ரெடி என வந்த வேகத்திலேயே சூடு காட்டி நடிக்கத் தயாராகி விட்டாராம். நேற்று ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆரத்யா, விரைவில் தனது புதிய படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.