மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஒரே ஒரு படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் யார் என்றால் அது சாய் பல்லவி தான். 'பிரேமம்' மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற வேடத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரும் புகழ்பெற்றார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பலரும் முயன்றனர்.
பிரேமம் படத்துக்குப் பிறகு ஒரேயொரு மலையாளப்படத்தில் நடித்தவர் அதன்பின்னர் 'FIDDA' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். சேகர் காமுலா இயக்கிய இந்த படமும் சாய் பல்லவிக்கு டோலிவுட்டில் நல்ல அறிமுகத்தை தந்தது.
அதன் பிறகு 'கரு' படத்தின் மூலம் தற்போது கோலிவுட்டுக்கு வந்துள்ளார் சாய் பல்லவி. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்த படம் 'கரு கலைப்பு' சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை அம்சம் கொண்ட படமாம். இந்த படத்தில் 4 வயது குழந்தைக்கு தாயாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.