ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் சங்க தலைவராக பொறுப்பு சுமைகள் கூடியிருந்தாலும் ஒருபக்கம் நடிப்பிலும் பிசியாகவே இருக்கிறார் நாசர். நாசரை பொறுத்தவரை அவர் பன்முக நடிகர். அதனாலேயே ஒரு பன்மொழி நடிகரும் கூட. தமிழுக்கு அடுத்தபடியாக அவர் பிசியாக நடித்துக்கொண்டு இருப்பது தெலுங்கில் தான். மலையாளத்தில் அவ்வப்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒன்று என தலைகாட்டுவதுதான் வழக்கம். அந்தவகையில் தற்போது ஆபாசம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் நாசர்.
'ஆபாசம்' என்கிற டைட்டிலை பார்த்து முகத்தை சுளிக்க வேண்டாம். அர்ஷா பரத சம்ஸ்காரம் என்கிற மூன்று கதாபாத்திரங்களின் பெயர்ச்சுருக்கம் தான் இந்த ஆபாசம். ரீமா கல்லிங்கல், சுராஜ் வெஞ்சாரமூடு, அலான்சியர் லே ஆகிய மூவர்தான் இந்த கேரக்டரில் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தில் நாசருக்கு போலீஸ் அதிகாரி வேடம்.. அதிலும் தமிழக-கேரள எல்லைபகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் அதிகாரியாக நடிப்பதால் படம் முழுதும் தமிழும், மலையாளமும் கலந்தே பேசுவாராம் நாசர். இந்தப்படத்தின் மொத்தக்கதையும் ஒரு பேருந்தில் நடப்பதுபோல உருவாக்கப்பட்டுள்ளதாம்.