ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூர்யா தயாரிப்பில், குற்றம் கடிதல் பிரம்மா இயக்கத்தில், ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன், நாசர் நடிப்பில், கடந்த வாரம் வெளியான படம் 'மகளிர் மட்டும்'. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த '36 வயதினிலே' படத்தைப் போலவே இந்த படமும் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறது. எனவே பெண்கள் மத்தியில் மட்டுமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
'ஜோக்கர்' படத்தை இயக்கிய ராஜுமுருகன் 'மகளிர் மட்டும்' படத்தை பார்த்துவிட்டு, ''மகளிர் மட்டும்' படத்தை பார்த்தேன். நெடுநாட்களுக்குப் பிறகு கண்ணீரையும், புன்னகையையும் தந்த படம். நமது அம்மாக்களின், சகோதரிகளின், மனைவிகளின், காதலிகளின், தோழிகளின் அகத்தை அற்புதமாய் பேசுகிற படம். ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படைப்பு. தோழன் இயக்குனர் பிரம்மாவுக்கு முத்தங்கள். இப்படியான நல்ல படைப்பை தந்த தயாரிப்பாளர் சூர்யா, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியனுக்கும், படத்தில் பங்காற்றிய அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்'' என்று தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ராஜுமுருகனின் பாராட்டை மகளிர் மட்டும் விளம்பரத்துக்கு பயன்படுத்த உள்ளார்கள்.